புதன், 16 மார்ச், 2011

சுனாமியின் கேள்விகள்...

சுனாமியின் கேள்விகள்... இந்த சுனாமி ஜப்பானுக்கு மட்டுமல்ல ...உலகம் முழுக்க வாழும் மனிதர்களுக்குத் தன்னுடைய கேள்வி நடனத்தை நிகழ்த்திக் காட்டி,உலகத்தின் தோள்களை உலுக்கிப் பிடித்து தன்னுடைய கேள்விகளை உரக்கக்  கேட்டிருக்கிறது ...புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,புரிந்தவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும் ...  
                                                 மனிதன் அறிவின் திமிரால் இயற்கையின் படைப்பை மீறி அதன் இயல்புக்கு மாறாக ,அணு உலை ,ஆழ்துளை ,எங்கு பார்த்தாலும் இரும்புக் கோபுரங்கள் ,சுரங்கப் பாதைகள் ,கதிர் வீச்சுக் கருமாந்திரங்கள் என மெட்டல் மேனியாக்களாகவும் ,செயற்கை மூளை சிற்பிகளாகவும் மாறி மனிதம்  மறந்து திரிகின்ற  வேளையில் ,  ஆக்குவதும் ,அழிப்பதும் என் வேலை என்றிருக்க ...அணு உலை கட்டி அழிவு வேலை செய்ய நீங்கள் யார்? ...உங்கள் ஆயுட் கால அறிவு முழுதும் கொட்டி ஆர்பரித்தாலும் , என் சிறு அசைவுக்கு உன்னால் பதில் சொல்லிட முடியுமா ? என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது ...அமெரிக்காவாகட்டும் ,சீனா வாகட்டும்  இன்னும் உலகின் எந்தப் பெரிய வல்லரசாகட்டும் ...ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ...நாம் எல்லோருமே பிழைக்க வந்தவர்கள்  ...அதுவும் இயற்கை அனுமதிக்கும் வரை..இதைப் புரிந்து கொண்டால் நாச வேலைகள் மறந்து நேச வலைகள் விரித்திடுவோம் ...           

12 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்கள். அழகான எழுத்து நடை.
    வாழ்த்துக்கள் ஜெயகுமார்.

    பதிலளிநீக்கு
  2. செவிட்டில் அறைந்தார் போல சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. nanri madurai saravanan,nanri kakku manickam,and nanri satharanamanaval....thodarnthu vaarungal...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றி திரு ரமேஷ்....

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நன்றி திரு விக்னேஷ்...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி திரு விக்னேஷ்....

    பதிலளிநீக்கு
  7. நன்றி திரு விக்னேஷ் ...தங்களை பற்றிய விபரம் அறிந்து கொள்ளலாமா?தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்...
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. அருமை, இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்பட்டால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஒரு நல்ல பதிவு

    பதிலளிநீக்கு